Sunday, May 22, 2016

subsidence in Pussellawa- Displaced 45 families

புஸ்ஸல்லாவையில் நிலம் தாழ் இறக்கம் - 45 குடும்பங்கள் இடம் பெயர்வு உடபளாத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோகம தோட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நிலம் தாழ் இறங்கியுள்ளது. இதனால் லயன் குடியிருப்பு தொகுதிகள் வெடிப்புற்ற நிலையில் 45 குடும்பங்களைச் சேர்ந்த 147 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்வாறு இடம்பெயர்ந்துள்ள மக்கள் கெலேகால கிராமத்தின் புஸ்ஸல்லாவ சரஸ்வதி மத்திய கல்லூரியில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறித்த பகுதியிலுள்ள மக்களுக்கு, பிரதேச செயலகத்தின் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரினால் உலர்உணவு பொருட்கள் உட்பட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.பாதிப்புக்குள்ளான மக்கள் கருத்து தெரிவிக்கையில், “எங்களுக்கு தேவையான ஆரம்பகட்ட வசதிகள் யாவும் பூர்த்தியாகி உள்ளது, அடுத்த கட்டமாக எங்களுக்கு தற்காலிக வீடுகள் அமைப்பதற்கும் தொடர்ந்து நிரந்தர வீடுகளுக்கு செல்லவும் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்கள்.

No comments: